30/11/2023

உடைஞ்சபல்லே மீண்டும் மீண்டும் உடையுது

 

 


 உடைஞ்சபல்லே மீண்டும் மீண்டும் உடையுது- அட
முடிஞ்சகதை மீண்டும் மீண்டும் தொடருது

என்னக் கணக்கிதுவோ
....எதுவும் விளங்கவில்லை..
என்ன வழக்கிதுவோ
....ஏனோ முடியவில்லை..

உலகம்போற போக்குல உசரமின்னும் கிடைக்கல...
பயணம்போற போக்குல பல்லுகூட நிலைக்கல..

வயசுமட்டும் ஏறுது...
வாழ்க்கை இன்னும் மாறல...
முயற்சியெல்லைத் தாண்டுது
முடிவு மட்டும் தெரியல...

✍️செ. இராசா

No comments: