09/01/2023

நல்லவன் யாரு? கெட்டவன் யாரு?

நல்லவன் யாரு? கெட்டவன் யாரு?
.....................நம்ப முடியல...!!!!
சில்லரை யாரு? சினேகிதன் யாரு?
....................ஒன்னும் புரியல...!!!!
 
நேரப்பார்த்தா நண்பேங்கிறான்..
தள்ளிப்போனா வம்பேங்கிறான்.
அள்ளித்தந்தா கர்ணங்கிறான்..
கிள்ளித்தந்தா கஞ்சங்கிறான்..‌
 
பழகப்பழகப் பாலு புளிக்கும் 
..........பழமொழிதாங்க!
பழகும்போது தெரிவதில்லை
...........அதுமட்டும் ஏங்க?
விலகவிலக வேசங்களையும்
...........வெளிப்படையாங்க!
விலகும்முன்னே தெரிவதில்லை
...........அதுமட்டும் ஏங்க?
 
✍️செ. இராசா

No comments: