24/01/2023

கண்ணாடி போட்டபடி

 


திடீரென்று புலனத்தில் (Whatsapp) ஓர் குழுவில் சேர்வதற்கான அழைப்பு வந்தது. என்னவென்று பார்த்தால் 95 வது வருடம் 10ஆம் வகுப்பில் சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளியில் படித்த மாணவர்கள் குழுவாம். புகைப்படத்தில் என்னைத் தேடியபோது சந்தோசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம், காது இரண்டும் விடைத்தபடி, குழி விழுந்த ஒடுங்கிய கன்னங்களுடன், மிகவும் குள்ளமாக..... ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருந்தேன். சத்தியமாக, அதில் நண்பன் சுகுமாரையும் வாத்தியார்களையும் சில நண்பர்களையும்தவிர யாருடைய உருவமும் பெயர்களும் ஞாபகமே இல்லை. 27 வருடங்கள் ஓடிவிட்டதல்லவா??
 
கண்ணாடி போட்டபடி
........காலரில்கை வச்சபடி
பெண்களின் பின்னாடி
.......பேபேன்னு- சுண்டலிபோல்
பத்தாம் வகுப்புலநான்
.......பார்க்குறத பார்க்கயில
அத்தனை சந்தோஷம்;
.......ஆம்!
 
✍️செ. இராசா
(மற்ற படங்களையும் சேர்த்துள்ளேன். இதில் 10ஆம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தமைக்கான பெயர் பட்டியலில் நம் பெயர் இன்னும் உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது)

No comments: