10/01/2023

ஐயானா மா.சு பாருடா ஆ (அம்மானா_சும்மா_இல்லைடா)

 


 மெட்டு_அம்மானா_சும்மா_இல்லைடா

(மா.சுப்பிரமணி ஐயா அவர்களுக்காக)
 

பல்லவி 

ஐயானா மா.சு பாருடா ஆ...
அவர் இல்லேனா வேற யாருடா ஆ... (2)
கட்சி யோட ஆர்மி ஆர்மி
எங்க ரோலு மாடல் நீங்க சாமி

செஞ்சவர மறந்தா
அவன் நன்றிகெட்ட ஆளு
அந்த உத்தமர அழைச்சா
அவர் வந்திடுவார் கேளு

ஐயானா மா.சு தானடா
அவர் இல்லேனா நாம இல்லடா ஆ...
 

சரணம்_1
நம்ம கட்சி பேர் எடுத்தா
ஐயாவுக்கு சந்தோசம்
நாலு பேர வாழ வச்சா
தளபதிக்கும் சந்தோசம்

போற நிதி நன்மை செஞ்சால்
ஏழைக்கெல்லாம் சந்தோசம்
நல்ல திட்டம் சேர்ந்த தென்றால்
எப்போதுமே சந்தோஷம்

நம்ம கழகம்
ஆட்சி நடந்தா
டெல்லியுமங்கே
சொல்லக் கேட்கும்
நம்ம மதிச்சா
நாமும் மதிப்போம்
வம்பு பண்ணுனா
வம்பு தானடா...

வந்தாலும் வராமப் போனாலும்
நாளும் பணி செய்வோம் வாடா...

ஐயானா மா.சு பாருடா ஆ...
அவர் இல்லேனா வேற யாருடா ஆ

*************** 

சரணம்_2

இராவு பகல் கண் முழிச்சு
நாளும் நன்மை செய்திடுவார்
வாலாட்டும் பேர்களுக்கு
தன் மொழியில் புன்னகைப்பார்..

தொல்லைதந்த நோய் துரத்த
கண்ணுறக்கம் தள்ளி வச்சார்
ஊருக்காக முன்ன நின்னு
தன்மகனைக் கொல்லி வச்சார்

சொல்ல நினைச்சா ஆ
நெஞ்சம் கொதிக்கும்
தாயிபோலத் தான்
என்றும் அவரே....

நாட்டுக் காகத்தான்
என்றும் நினைக்கும்
ஸ்டாலின் ஐயாவின்
நண்பர் இவரே...

கட்சியைப் போல் கண்ணியம் கொண்டு
அண்ணனைப் போல் அண்ணனே உண்டு
  

பல்லவி 

ஐயானா மா.சு பாருடா ஆ...
அவர் இல்லேனா வேற யாருடா ஆ

✍️செ. இராசா

No comments: