08/01/2023

சோம்பல் முறி ------- ஔவைத் திங்கள் 24

விழிகள் திறந்து விடியலைப் பார்ப்போர்
விழிமூட மாட்டார் விரைந்து
(1)
 
உறங்கும் தருணம் உறங்கா திருந்தால்
உறங்குவாய் பின்னர் உழன்று
(2)
 
பிறகு பிறகென்று பேசுகின்ற யாரும்
பிறகும் பிறகென்பர் பார்
(3)
 
அன்றன்று செய்வதை அன்றன்று செய்பவர்கள்
என்றைக்கும் முன்செல்வர் இங்கு
(4)
 
கொட்டாவி விட்டபடி கோபுரத்தைப் பார்ப்பவர்க்குக்
கிட்டுமிடம் எப்போதும் கீழ்
(5)
 
வாய்ப்பு வருமென்று வாசலையே பாராமல்
வாய்ப்பை உருவாக்க வா
(6)
 
என்னத்த என்போர்சொல் எப்போதும் கேளாமல்
முன்னோக்கிச் சென்றால் முதல்
(7)
 
ஓய்வெடுத்த பின்னாலும் ஓடத் தயங்கினால்
நோய்ப்பற்றும் என்றெண்ணி ஓடு
(8)
 
துடிப்புடன் இல்லாமல் சோர்வுடன் நின்றால்
படியேறிப் போவர் பலர்
(9)
 
வருகின்ற வாய்ப்பெல்லாம் வாழ்க்கையென எண்ணித்
தருவதை நன்றாகத் தா!
(10)
 
✍️செ. இராசா

No comments: