15/02/2021

மூத்த கவிஞர் திரு. கண்ணன் நடராஜன் ஐயா

 


இன்று 14.02.2021 நம் வள்ளுவர் திங்கள் நிகழ்வில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியீடு செய்ய இருக்கும் மூத்த கவிஞர் திரு. கண்ணன் நடராஜன் Kannan Natarajan ஐயா அவர்களை அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம் உறவுகளே....
 
 
தெள்ளுதமிழ்ச் சோலையிலே
............... திங்கள் கிழமையிலே
வள்ளுவம் போற்றிடவே
...............வாருங்கள் என்றழைத்தால்
வள்ளுவர் சொன்னபடி
...............வார்க்கின்ற நற்கவிஞர்!
வள்ளுவர் திங்களின்
...............மாரத்தான் நாயகர்!
கண்ணன் நடராஜர்
................கைவண்ணம் காட்டியநூல்
மண்ணில் எங்கெங்கும்
................மாண்புடன் சென்றடைய
சேக்கிழார் ஐயாவின்
................செந்தமிழ் தொண்டர்சூழ்
வார்க்கின்றோம் வெண்பாவில் வாழ்த்து!!
வாழ்க வளமுடன் ஐயா!!

No comments: