01/02/2021

என்னுயிரே----------புலம்பல் பத்து



என்னுயிரே நீதானே.... என்றெல்லாம் சொல்லியபின்
உன்னுயிரைக் கொல்வாயோ நீ?!
(1)

மென்பொருளாய்* வைத்தென்னை மேலாண்மை செய்தபின்
வன்பொருளாய் ஆனாயோ நீ?!
(2)...*Software

கண்ணுக்குள் லென்ஸைப்போல்* கவ்விக் கிடந்தாயே
கண்காணச் செய்யாயோ நீ?!
(3)...*contact lens

குளம்பியாய்ப்* பற்றியெனைக் கொஞ்சிய நீயா
குழம்பிட வைக்கின்றாய்க் கூறு
(4)...*coffee

எரிபொருளாய் மாறி இயக்கிய நீயா
அரிபொருளாய் ஆனாய்! அட!!!
(5)

தொடுதிரைபோல்* வைத்தென்னைத் தொட்டணைத்த நீயா
விடுமுறைபோல் சென்றாய் வெளி
(6)...*touch screen

கசக்கிய காகிதத்தைக் கைவிடல் போலே
கசந்ததென விட்டாயோ கை
(7)

சரக்கைக் குடித்துவிட்டுச் சாய்கின்ற பேராய்
சிரம்தொங்க வாழ்கின்றேன் பார்!
(😎

குடித்தபின் கொட்டும் குடிகாரன் போலே
குடிக்காமல் கொட்டுகிறேன் பார்!
(9)

இணையத்தில்* வந்திடும் எல்லாமும் போலே
இணைதேடி வாராயோ நீ!
(10)

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_147


No comments: