13/08/2023

மாடிமேல மாடியென்று

மாடிமேல மாடியென்று
......மாடிவீடு கட்டுவார்!
ஓடியாடி ஓய்ந்தநாளில்
......ஓரமாகத் தூங்குவார்!
வாடிநெஞ்சம் நொந்துநொந்து
.....வாய்த்தவாழ்வை ஏசுவார்!
நாடிகொஞ்சம் தேஞ்சபின்னே
.....வாழயெண்ணி ஏங்குவார்!

கோடிமேல கோடியென்று
.......கோடிசேர்க்க எண்ணுவார்!
கோடியின்றி யாதுமின்றி
........கூற்றனோடு செல்லுவார்!
ஆடியோடி ஓடியாடி
........ஆண்டவனைத் தேடுவார்!
தேடியோடி தன்னிலோடி
.........தெய்வமங்கே காணுவார்!

✍️செ. இராசா

(எமக்குப் பிடித்த சிவவாக்கியச் சந்தத்தில் மீண்டும் ஒரு தத்துவப் பாடல்)

No comments: