18/08/2023

இல்லாளை வாழ்த்தும் கவி

 


  #பிறந்தநாளுக்காக

என்னைப்போல் நீ
உன்னைப்போல் நான்
என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்
நீ வேறு நான் வேறுதான்
அதனாலென்ன?!
அந்த முரண்பாட்டில் பூத்த
உடன்பாட்டால்தானே
இரட்டைச் செல்வங்கள்...!!!

இப்படிச் செய்
அப்படிச் செய்
என்றெல்லாம் அதிகாரம் செய்யமாட்டேன்
செய்தாலும் கேட்க மாட்டாய்தான்
அதனாலென்ன?!
அன்பின் அதிகாரமும்
அடங்கமறுத்தலும்தானே
நமக்கான அடையாளங்கள்!

இங்கே நீ
அங்கே நான்
என்றெல்லாம் கவிதையெழுத மாட்டேன்
எழுதினாலும் நீ ஏற்கமாட்டாய்தான்
அதானலென்ன?!!
பிரிவுகள் பிரித்தாலும்
பிரியங்கள் பிரியாததுதானே
தியாகத்தின் அர்த்தங்கள்!

வா....
நீடூழி வாழ்வோம்....என்னவளே...!!!

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

✍️செ. இராசா

No comments: