20/08/2023

இத்தனைநாள் ஆனபின்னும்---------குறும்படம் ஒன்றிற்காக எழுதியது

இத்தனைநாள் ஆனபின்னும் நம்இருதய
மூலையின் ஓரம்
எத்தனையோ வலியிருந்தும் அதுபின்னணி இசைபோல் ஓடும்
 
கண்ணிமைகள் திறந்திருந்தும் காண்கிற காட்சிகள் யாவும் .
எண்ணங்களின் கவிதையினால்
மின்னிடும் கானலாய் மாறும்‌.
 
என்ன இது?! என்ன இது?
காலம் செய்த மாயை இது...
உண்மையெது? பொய்களெது?
உள்ளம் ஓதும் வேதமது
 
எத்தனைநாள் ஆனபின்னும் நம்இருதய
மூலையின் ஓரம்
எத்தனையோ வலியிருந்தும் அதுபின்னணி இசைபோல் ஓடும்
 
✍️செ. இராசா

No comments: