26/07/2023

ஈசனே.............சிவகாமி நேசனே மெட்டு



சொல்கின்ற சொல்லுக்கும்
......செய்கின்ற செய்கைக்கும்
............சொட்டளவும் பேதமில்லை!
...சூழ்ந்துள்ள பேர்கண்டும்
.......சொல்கின்ற பொய்கண்டும்
..........எண்ணத்தில் மாற்றமில்லை!

வெல்கின்ற காலத்தில்
...‌...வென்றிடுவோம் என்றாலும்
...........வேகத்தை விட்டதில்லை!
...நேர்கின்ற நேரத்தில்
.......நேராமல் போனாலும்
............நெஞ்சத்தில் நழுவவில்லை!

இல்லையெனச் சொல்லாமல்
.......இன்னுமென இன்னுமென
...........இன்னும்தான் எழுதுகின்றேன்!
...இவ்வுலகை வெல்லாமல்
.....என்னெழுத்தை ஏற்றாமல்
.......ஈசனையும் விடுவதில்லை!

சில்லறைகள் செய்கின்ற
.....சீரில்லா செய்கையினால்
........ செந்தமிழைக் காணவில்லை!
சீர்கெட்ட நற்றமிழை
.....சீராக்கம் செய்யாமல்
.......நானுமினி விடுவதில்லை

ராஜனே கவிதாவின் நேசனே- யாம்
அறங்காத்த வள்ளுவரின் தமிழ்தாசனே..

✍️செ. இராசா

No comments: