13/07/2023

அத்தனை இரவல்களுக்கும் ஓர் கணக்குண்டு

 


இருவர் தந்த இரவலே
இந்த உடம்பு...

இறைவன் தந்த இரவலே
இந்த உயிர்...

உலகம் தந்த இரவலே
நம் உடைமை...

இங்கே‌‌...
அத்தனை இரவல்களுக்கும்
ஓர் கணக்குண்டு...
மறவாதீர்...
நீங்களாகத் தராவிட்டாலும்
அவை கட்டாயம் வசூலிக்கப்படும்

✍️செ. இராசா

No comments: