16/07/2023

தேமதுரத் தமிழைத் ........திகட்டாமல் தருவேன்

 


தேமதுரத் தமிழைத்
........திகட்டாமல் தருவேன்
தென்றலென ஓடிவாயேன்!
பார்மணக்கத் தமிழைப்
........பலகாலம் தருவேன்
பா-ரதத்தில் ஏறிவாயேன்‌!

நாவினிக்கத் தமிழை
.........நன்முறையில் தருவேன்!
நாயகனே ஓடிவாயேன்!
வாழ்வினிக்கத் தமிழை
.........வள்ளுவனாய்த் தருவேன்
வாசகனாய் மாறிவாயேன்!

தமிழாக நிற்கின்ற
........வேலய்யா- உந்தன்
தமிழ்கொஞ்சம் என்னுள்ளே
.........ஊற்றய்யா!
தமிழாலே ஆள்கின்ற
.........வேலய்யா-எந்தன்
தமிழ்நெஞ்சம் கூடத்தான்
.........ஏ(ஊ)ற்றய்யா!

✍️செ‌. இராசா

No comments: