20/07/2023

கேட்டவுடன் வருபவளே..

 


கேட்டவுடன் வருபவளே..
கேட்காமலே தருபவளே.‌‌
தேடுகிறேன் தெரியவில்லையோ- எந்தன்
தேடலிலே தெளிவு இல்லையோ?

பாக்களென வருபவளே‌.‌..
பாடலெனத் தருபவளே...
வாடுகிறேன் தெரியவில்லையோ- எந்தன்
வார்த்தையிலே உணர்வு இல்லையோ?!

வயசு போகிறது வாடி அம்மா
வையம் வாழ்த்திடநீ தாடி அம்மா
மனசு நோகிறது வாடி அம்மா
நானும் வென்றிடவே தாடி அம்மா

✍️செ‌. இராசா


No comments: