09/02/2023

 

 


செந்தமிழ் பாடிய சித்தர்கள் கூட்டத்தில்
வந்தவன் யாரென சொல்லு?- சிந்து
தந்தவன் யாரென சொல்லு?
பண்டைய பாவலர் யாருக்கோ பாடிட
பண்ணினான் பாரதி வந்து!- பண்ணில்
பிண்ணினான் காவடிச் சிந்து!

கற்றவர் மற்றவர் கட்டிடும் பாக்களில்
நற்றமிழ் செய்ததார் சொல்லு? - கற்று
கற்றிடத் தந்ததார் சொல்லு!
முற்றிலும் மாறிய முத்தமிழ் பாடலைப்
பற்றினான் மாகவி அன்று- பற்றி
முற்றிலும் மாற்றினான் நன்று!

✍️செ. இராசா

No comments: