16/02/2023

நல்லவன்போல் கதை அளப்பான்

  


#பாடல்

#நல்லவன்போல் கதை அளப்பான்
நம்பி வந்தா கழுத்தறுப்பான்
வாயிலேயே வடை சுடுவாங்க...
அண்ணனைப்போல் இல்லையென்பான்
அண்டி வந்தா தொல்லையென்பான்
நாயைப்போல மதிச்சிடுவாங்க‌.‌.‌

வேணாங்கோ வேணாங்கோ
வீணாங்கோ போவீங்கோ...(2)

விட்டுடு விட்டுடு விலகி வந்திடு
சட்டுனு பட்டுனு நகர்ந்து வந்திடு....
அப்படி இப்படி சொல்லியே சொல்லியே
ஆட்டையப் போடுவான் தள்ளியே நின்னுக்க..
எப்படி இன்னுமும் செய்யலாம் செய்யவே
எப்போதும் பேசுவான் சொல்லுறேன் கேட்டுக்க..

அடி...
பட்டவன் சொல்லுறேன் கேட்டுக்க- கேடு
கெட்டவன் யாருன்னு பார்த்துக்க......(2)

துட்டுக்கு மாத்திரம் தூண்டில போடுவான்
நட்புனு சொல்லியே நஞ்சினை ஊட்டுவான்
மூஞ்சிக்கு முன்னால பாசத்தைக் கொட்டுவான்
கெஞ்சியும் தல்லைனா கம்பிய நீட்டுவான்..

விட்டுடு விட்டுடு விலகி வந்திடு
சட்டுனு பட்டுனு நகர்ந்து வந்திடு....

✍️செ. இராசா

No comments: