21/02/2023

எட்டாம் வள்ளல் மயில்சாமி (மெட்டு: பரமசிவன் கழுத்தில்)



மனிதனொருவன் இறப்பில் இருந்து பாடம் கற்பது....
இதுதான் வாழ்க்கையா?
மனிதனொருவன் இறப்பில் இருந்து பாடம் கற்பது....
இதுதான் வாழ்க்கையா?
உன்னால் முடிந்த வரைக்கும் உதவி செஞ்சால்
அதுதான் வாழ்க்கையே..
அண்ணன் வாழ்ந்தது..
அதில் அர்த்தம் அள்ளது.

ஓடி வந்து உதவி செஞ்ச ஓபராயைக் கண்டு
தன் கழுத்தில் கிடந்தச் சங்கிலியைக் கழட்டித் தந்தார் அன்று..
போத்தக் கூட வழியில்லாத தாயின் நிலையைக் கண்டு...
தன் உடையை எடுத்துப் பேகனைப்போல் போத்திவிட்டார் அன்று...

வறியோரை ஒருநாளும் ஒதுக்காதே என்று
ஞானமுள்ள மனிதனுக்கு அண்ணன் சொன்னது
அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

(மனிதனொருவன்)

இருக்கும்போது கொடுப்பதிலே இங்கே என்ன சிறப்பு?- அட
இருப்பதையும் கொடுத்ததுவே மயிலு சாமி பிறப்பு...(2)

(வேறு)
ஏழு வள்ளல் என்றுதானே காலம் சொன்னது-
இல்லை..
எட்டாம் வள்ளல் அண்ணனென்று ஏற்றுக்கொண்டது.....

✍️செ. இராசா

No comments: