05/02/2023

வான்புகழ் கொண்ட வள்ளுவனின் சிலை வைக்க


 

#அவசரப்பட்டு_ஒரு_முடிவுக்கு_வரவேண்டாம்
#பொறுமையாப்_படிங்க

வான்புகழ் கொண்ட
வள்ளுவனின் சிலை வைக்க
தேன்தமிழ் கையெழுத்தால்
தீர்வுதந்த பேனாவை
ஓரடி கூடுதலாய் (133+1=134)
ஒய்யார சிலையாக்கி
யாவரும் #வணங்கிடவே🙏
எழுப்புகின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!!

மையில் பொய்யூற்றி
பையை நிரப்பாமல்
மெய்யை மையாக்கி
கைதூக்கி விட்டவரின்
சரித்திரப் பேனாவை
சட்டைக்குள் வைக்காமல்
வையகம் பார்த்திடவே
வைக்கின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!

பீனிக்ஸ் பறவையென்றும்
பறக்கும் குதிரையென்றும்
வாய்க்கு வந்ததுபோல்
வடைசுட எண்ணாமல்
பேனாவை பேனாவென்றே
பேசுகின்ற நேர்மையினை
எதிரியும் பார்த்திடவே
எழுப்புகின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!!

ஆற்றில் சிலை வைத்தால்
அன்றைக்கு பேசாதோர்
கடலில் சிலை வைத்தால்
கத்துகிறார் பாருங்களேன்...
#இயற்கையைப்_பங்கிட
எங்களுக்கும் உரிமையுண்டு..
#அடித்துச் சொல்லிடவே
அமைக்கின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!!

#மீண்டும்_சொல்கிறேன்
#_அவசரப்பட்டு_ஒரு_முடிவுக்கு_வரவேண்டாம்

✍️செ. இராசா

No comments: