20/10/2021

சாமியென ஆராதித்தால்


 

சாமியென ஆராதித்தால் ஆத்திகவாதி!
சிலையென மறுதலித்தால் நாத்திகவாதி!

அதை மட்டும் இறை என்றால் அஞ்ஞானி!
அதையும் தாண்டி இறை என்றால் மெய்ஞானி!

என்னே கலை என்றால் இரசிகன்!
என்னே விலை என்றால் மூடன்!

வருமுன்னே கண்டுகொண்டால் சிற்பி!
வந்தபின்னும் காணாவிட்டால் அற்பி*!

✍️செ. இராசா

(*அற்பி- கஞ்சன்)

No comments: