04/10/2021

மனைவியிடம் அஞ்சாதே----வள்ளுவர் திங்கள்-179



பொண்டுக சட்டியெனப் பொல்லாப்புக் குள்ளாகும்
பெண்வழிச் சேறல் பிழை
(1)

நல்லறம் செய்யவும் நாணும்பெண் தாசரைக்
கல்லைப்போல் எண்ணிக் கட
(2)

மூத்திரம் போகவும் முன்னால்போய்க் கேட்போரை
ஆத்திரம் கொண்டே அறு
(3)

அன்பென்ற பேரில் அடிமையாய் ஆனோரை
என்சொல்லி என்னாகும் இங்கு
(4)

என்னென்ன செய்தாலும் எண்ணாதோர் கேட்பார்கள்
என்னய்யா செய்தாய் எமக்கு
(5)

மனைவியின் சொல்லையே மந்திரமாய் எண்ணி
வினைகளைச் செய்வோர்கள் வீண்
(6)

கேட்பதைக் கேட்பது கீழ்மையில் சேராது
கேட்டையும் கேட்பது கீழ்
(7)

கர்ம வினைகழிக்கும் காலத்தின் ஓட்டத்தை
அர்த்தமாய் மாற்றட்டும் அன்பு
(8)

அன்பை விரிக்காமல் அத்தனையும் வீடென்ற
சின்னத் தனத்தை விடு
(9)

அறப்பால் வழியே அவர்பால் முறையே
உறவின்பால் சென்றால் உயர்வு
(10)

✍️செ.இராசா

No comments: