11/10/2021

முழுக்கவச உடை

 


கத்தார் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இதுவரையிலும் இந்த முழுக்கவச உடையெல்லாம் போட்டதே கிடையாது. என்ன செய்ய எங்கே அப்படியோ அங்கே அப்படி மாற வேண்டி உள்ளதே...

வளைகுடா நாடுகளின் ஆதாரமே பெட்ரோலிய உற்பத்திதான். அவர்களின் செல்வம் கொழிக்கும் நீர்மத் தங்கமாய் அவை உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதன் இழப்பு அவ்வளவு எளிதில் ஈடுசெய்ய முடியாது. அதனால் அங்கே கெடுபிடிகள் பயங்கரமாக இருக்கும். அங்கே யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. உள்ளே புகவே அப்படியென்றால் வேலை செய்வது எப்படி இருக்குமென்று நீங்களே யோசித்துப் பாருங்கள். மற்ற இடங்களில் செய்யும் வேலையை விட நான்கு மடங்கு நேரம் கூடுதல் செலவாகும். அப்படிப்பட்ட இடத்திற்கு இன்று ஒரு தள ஆய்விற்காகச் சென்று வந்தேன். இங்கே நான் போட்டுள்ள உடை, தலைக்கவசம், கையுறை, கண்ணாடி, குடிக்க நீர்.....என அத்தனையும் இருந்தால்தான் வேலைக்கு அனுமதிப்பார்கள். அப்பப்பா....போதும் போதும்னு ஆயிடுச்சு.......எப்படித்தான் கொளுத்தும் வெயிலில் இப்படியே வேலை பார்க்கிறார்களோ?!!... உண்மையில் அவர்களது வேதனையை உணர்வது அவ்வளவு சுலபமில்லீங்க....

இந்தக்காச சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு? வேலைவாய்ப்பும் குறைகிறது. சம்பளமும் ஏறவில்லை. கொரோனாவச் சொல்லிக் குறைச்சதுதான் மிச்சம். ஆனால் மத்த எல்லாமே கூடிடுச்சு....இப்படியே போனால்...... அடே சோனமுத்தா😭😭😭😭

No comments: