18/10/2021

தன்னிலை மாறாதே ----------- குறளின் குரல்

 #தன்னிலை_மாறாதே
#குறளின்_குரல்

இன்பமோ துன்பமோ எந்நிலை ஆயினும்
தன்னிலை மாறாமை சால்பு
(1)

இல்லாரும் உள்ளாரும் எல்லோரும் ஒன்றெண்ணும்
நல்லோரை என்றென்றும் நம்பு
(2)

என்னதான் செய்தாலும் என்னத்த என்போர்க்கு
தன்செயல் மட்டும் சரி
(3)

மற்றோரை வாழ்த்த மனமில்லை என்றானால்
மற்றோரின் வாழ்த்தை மற
(4)

நிறைகளை முன்கூறி நேர்த்தியாய் பின்னே
குறைகளை(ய)க் கூறல் குணம்
(5)

அரிசியில்லா நெல்போல் அறமில்லா பக்தி
தரிசென்றே எண்ணித் தவிர்
(6)

பார்க்காத கண்களும் பக்தியில்லா ஞானமும்
சேர்க்காது தெய்வச் சிறப்பு
(7)

வீழ்ந்த மயிரென்று வீணாக எண்ணார்க்கே
தாழ்ந்தாலும் கிட்டும் தலை
(8.)

முற்போக்குப் பேச்சும் முறையற்றப் போக்கும்தான்
கற்புநெறி இல்லாரின் கண்
(9)

உயரத்தில் நின்றபடி ஒவ்வொன்றாய் கண்டால்
இயற்கைமுன் யாவரும் எள்
(10)

#வள்ளுவர்_திங்கள்_181

✍️செ. இராசா

No comments: