14/10/2021

புறநானூற்றுப் பாடல்----------தெளிவுக்கவி

  


 

#பாடல்
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்_2_0
#புறநானூற்றுப்_பாடல்_தெளிவுக்கவி

எல்லா ஊரும் நம்ம ஊருதான்
எல்லாருமே நம்மவுங்கதான்---(2)

நல்ல வினை கெட்ட வினைங்க
தன்னால வருவதில்லை
நம்ம செஞ்ச கரும வினை
நம்மவிட்டுப் போவதில்லை

நொந்தமனம் சாந்தமுற
எண்ணம்போல மருந்து இல்லை
வந்த உயிர் போறகதை
இங்கே ஒன்னும் புதுசு இல்லை

சந்தோசம் வந்ததுன்னா
தந்தனத்தோம் போடாத- அட
சொந்தகதைப் பெருமையெல்லாம்
சொந்தமுன்னு எண்ணாத

கஷ்டமா இருந்துச்சுன்னா
கண்டபடி சீறாத- அட
என்னடா வாழ்க்கையினு
எதேதோ பேசாத...

மழைத்துளி பார்த்தாயா?
சிறு துளி தானே அது....
பேஞ்சமழை நதியானால்
பெரும்பாறை உருளாதா?

ஓடுகிற ஆத்துமேல
ஆடிவரும் ஓடம்போல
ஓடுகிற வாழ்க்கையில
தேடிவரும் கர்மவினை

பெரிய்.....ய.... மனுசங்கன்னு
பெருசா வியக்காத..
சின்.....ன... மனுசங்கன்னு
சிறுசா நினைக்காத...

எல்லாமே கர்மவினை
எல்லாமே கர்மவினை...

✍️செ. இராசா

No comments: