10/09/2023

 


புல்மேல் உறையும்
பனித்துளிபோல்
சொல்மேல் உறையும்
கவித்துளியே நான்!

கல்வெட்டிப் பொறிக்கும்
கலையுருபோல்
சொல்கட்டிப் பொறிக்கும்
கவியுருவே நான்!

சந்திரனில் ஆயும்
சந்திராயன்போல்
சிந்தனையுள் ஆயும்
சிறுகவியே நான்!

ஓட்டுக்காய் ஏங்கும்
வேட்பாளன்போல்
பாட்டுக்காய் ஏங்கும்
பாவலனே நான்!

சனாதனம் பேசும்
தலைவனைப்போல்
சதாதினம் பேசும்
குடிமகனே நான்!

✍️செ. இராசா

No comments: