05/09/2023

காலொடிந்த ஆடுகண்டு

  


 காலொடிந்த ஆடுகண்டு
.....கண்கலங்கி நிற்பவர்
காலுரெண்டு போடுயென்று
.....காசுதந்து கேட்கிறார்!
ஓலமிட்டு மாருதட்டி
.....ஒப்பாரி வைப்பவர்
வாழுகின்ற நாளிலெங்கும்
.....ஊறுசெய்து கொல்கிறார்!

சாதியற்ற சாதியென்று
.....தன்னையிங்குச் சொல்பவர்
நாதியற்ற சாதிகண்டும்
.....நாலுகாலில் பாய்கிறார்!
தேதியென்ன காலமென்ன
.....தேவையில்லை என்பவர்
தேதிநல்ல தேதிகண்டு
.....தேர்தலன்று நிற்கிறார்!

✍️செ. இராசா

No comments: