28/09/2023

ஆயுர்வேத ஆனந்தம்

 


தலைக்கும் தோள்பட்டைக்கும்
ஒரு வித எண்ணெயும்
உடம்பு முழுமைக்கும்
இரு வேறு எண்ணெய்களுமாய்
ஒன்றன்பின் ஒன்றாகச்
சூடுபறக்கத் தேய்த்துவிட்டு
நரம்பையும் சதையையும்
நளினமாய் உறுவிவிட்டு
தலை வெளியிருக்க
உடலை உள்ளேவைத்து
மூலிகை நீராவியில்
முக்கியபடி அமரவைத்து
துண்டால் துவட்டியபின்
மீண்டும் குளித்துவந்தால்
இறந்த செல்கள் நீங்கி
புதிய செல்கள் துளிர்த்து...
அடா...அடா...அடா...
ஆனந்தமோ ஆனந்தம்: அது
ஆயுர்வேத ஆனந்தம்!
 
✍️செ. இராசா

No comments: