26/09/2023

செந்தமிழ் கொஞ்சிடும் கவியே

 செந்தமிழ் கொஞ்சிடும் கவியே
உன் கோபமும் அற்புத மொழியே
நற்றிணை யாவுன் விழியே
நல்ல நர்த்தனம் ஆடுது தனியே...

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லன்டி....என் சொந்தமே நீதான்டி

ஆண்:

மேகதூதம் படிக்க
உந்தன் மேனியைத் உற்றுப் பார்த்திடவா..
வெட்டும் மின்னல் ரசிக்க
கொஞ்சம் புன்னகைக் காட்டிடவா..

பெண்:

எம்மலரும் தேனை ருசிக்க
எந்த வண்டுக்கும் சேதிகள் சொல்லிடுமா?
சந்தோச தியானம் நடத்த
இது உன்தனி மலரல்லவா...

ஆண்:
கற்சிலைக் கவியென மாறி கனவென வந்ததோ முன்னாலே
கண்ணிமை இருப்பது மெய்யா அடிக்கடி பார்க்கிறேன் உன்னாலே..

பெண்:

சொற்பிழை புரிபவன் நீயா? சொற்களின் வித்தகன் நீதானே...
கற்றிட ஆசை எனக்கும் சொல்லிக் கொடுத்திடு என்மானே..

ஆண்:
தந்தானே தகதிமி தானே
தந்தாலே சம்மதந் தானே

பெண்:
பிறந்ததே உனக்கென நானே..
பிறகென்ன அவசரம் வீணே

✍️செ. இராசா

No comments: