21/09/2023

கனவில் கண்ட நோயைப் பார்த்து

 

கனவில் கண்ட நோயைப் பார்த்து
...களங்கிப் போயி நிக்கிற
மனதில் உள்ள மாயை கூட
...மல்லு யுத்தம் போடுற
தினமும் உந்தன் தேகம் எண்ணி
...தெளிவா நடக்க விரும்புற
சுணக்கம் கொண்டு சும்மா சும்மா
....சுருண்டு.. ஏனோ படுக்குற!
 
✍️செ. இராசா

No comments: