24/09/2023

  


அடிகள் இரண்டில் அளந்து சென்ற
...ஐயன் அடியைத் தொடுகையில்
அடியேன் மனதில் அளவு மீறி
...ஆவல் பெருகி வருகுதே‌!

கதம்ப மாலை கழுத்தில் போட
...கைகள் மேலே உயர்கையில்
கதம்ப மான நினைவு நெஞ்சில்
...காட்சி போல விரியுதே!

✍️செ. இராசா

No comments: