13/11/2022

"நான்-ஈ"யின் நாயகன் யார் ஈயே

 

 


ஊர்விட்டு ஊர்போகும் ஈயே- இனி
யார்வீட்டைப் போய்ச்சேர்வாய் நீயே..
கார்பற்றிக் கால்வைத்த ஈயே- இனி
யார்பற்றிப் பின்செல்வாய் நீயே...

இடம்விட்டு இடம்மாறும் ஈயே- என்
இடர்போல இடர்கொண்டாய் நீயே..
உடன்பற்றி உலவுகின்ற ஈயே- நீ
தடம்மாற காரணம்யார் நீயே...

தேன்-ஈ யின் மரபணி யார் ஈயே- பின்
வீண் ஈ யாய் போனதும் யார் நீயே.
"நான்-ஈ"யின் நாயகன் யார் ஈயே- அட
"நான்"கூட நாயகன் முன் நீயே...

✍️செ.இராசா

No comments: