20/11/2022

மௌனம்

 


மகர ஒற்றில்
'ம்' என்றிருப்பதல்ல மௌனம்..
மன ஓட்டத்திலும்
'ம்' என்றிருப்பதே இருப்பதே மௌனம் ‌
 
ஒலி இல்லா இசையாய்
மொழி இல்லாக் கவியாய்
அலை இல்லாக் கடலாய்
அசைவில்லா இயக்கமாய்
அப்படியே இருப்பதே மௌனம் 
 
ஊடலில் மௌனமென்றால் அங்கே கூடல்
கூடலில் மௌனமென்றால் அங்கே கூட்டல்\
 
மௌனம் உடைந்தால் அது பிறப்பு; உயிர்
மௌனம் அடைந்தால் அது இறப்பு
 
காந்தியின் மௌனம்
கூர்தல் ஆயுதம்...
காந்தி நோட்டின் மௌனம்
தேர்தல் ஆயுதம் ...
ரமணரின் மௌனம் ஞானம்
பாரதியின் மௌனம் ரௌத்திரம்
மேஸ்ட்ரோவின் மௌனம் கானம்
கேஸ்ட்ரோவின் மௌனம் தேசம்
 
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..
 
வேகாதபோது வருகின்ற சப்தம்
வெந்தபின் வருவதில்லை...
கரையோரம் வருகின்ற சப்தம்
ஆழத்தில் வருவதில்லை..
 
மௌனமே தவம்
மௌனமே சுகம்
மௌனமே பலம்
மௌனமே நலம்
 
✍️செ. இராசா

No comments: