06/01/2021

சிவப்பத்து ------- குறள் வெண்பாக்கள்----குறள் அந்தாதியும்கூட



#சிவனில்_தொடங்கி_சிவனில்_முடியும்
#சகர_தகர_மோனை_மட்டும்_உள்ளது

சிவமென்றால் என்ன சிவலிங்கம் தானா
சிவமென்றால் எல்லாம் சிவம்
(1)

சிவசிவ என்றே சிவனைத் தொழுவோர்
சிவனாலே ஆவார் சிவம்
(2)

சிவனவன் தாளில் சிரசினை வைத்தால்
சிவனால் உயரும் சிரம்
(3)

சிரத்தில் அகந்தை சிறிதேனும் இல்லார்
சிரத்தில் இருப்பான் சிவம்
(4)

சிவமய சிந்தையைச் சீவனில் கொண்டால்
சிவகணம் ஆக்கும் சகம்
(5)

சகமும் சனமும் சகலமும் இங்கே
செகநாதன் என்னும் சிவம்
(6)

சிவனை நினைந்து சிறிதும் அளித்தால்
சிவமாய்ப் பெருகும் தினம்
(7)

தினம்தினம் போற்றும் சிவனடி யாரும்
தினங்களில் ஆவார் சிவம்
(😎

சிவக்குரல் போற்றும் சிவக்குறள் பாட
சிவனால் வருமே செயம்
(9)

செயமே செயமே சிவனருள் வந்தால்
செயம்தரும் தெய்வம் சிவம்
(10)



No comments: