18/01/2021

அறிந்து சொல் -------அரசியல் பத்து---------குறள் வெண்பாக்களில்



ஒவ்வொரு சொல்லையும் ஊன்றிக் கவனித்தால்
அவ்வள(வு) அர்த்தங்கள்; ஆம்
(1)

திரிவடுகர் சொல்லே திராவிடர் என்று
திரிந்ததாய்ச் சொல்வர் தெளி
(2)

திராவிட நாடென்ற சித்தாந்தக் கொள்கை
வராமலே கைவிட்டோர் யார்?!
(3)

நாக்கெனும் ஆயுதத்தால் நாட்டையே ஆள்வோர்க்கு
வாக்கில்தான் என்றும் குறி
(4)

சங்க இலக்கியத்தில் சான்றில்லா ஓர்சொல்லால்
எங்களைச் சொல்லாய் இனி
(5)

அறிந்தேதான் சொல்கின்றார் ஆள்வோர்கள் என்றும்
அறியாத நம்மவரை ஆய்ந்து
(6)

சோழனின் ஆட்சி சுருங்கிய நேரத்தில்
ஆளத்தான் வந்தார்கள் அன்று
(7)

சித்தர்கள் சொல்லாத சித்தாந்த தத்துவமா
எத்தர்கள் சொன்னார்கள் இங்கு?
(😎

எதையெதையோ சொல்லி இனவாதம் செய்தே
விதைத்தார்கள் அன்று விதை
(9)

தமிழென்று சொன்னால் திராவிடன் என்றால்
தமிழென்ற சொல்லேன் தனித்து?
(10)

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_145

No comments: