12/01/2021

காதலென்னும் இம்சை----------இம்சைப் பத்து----குறள் வெண்பாக்கள்



நினைத்தாலே தித்திக்க நெஞ்சத்தில் கவ்வும்
உனைப்போல யாதுண்(டு) உரை
(1)

உன்னைநான் வர்ணித்தால் ஊருலகம் சொல்லாதா?
தன்னையே வர்ணிப்ப தாய்
(2)

ஒன்றுக்குள் ஒன்றாகி ஒன்றிய பின்னாலே
உன்நிலையும் என்நிலையும் ஒன்று
(3)

கண்ணுக்குள் சிக்கிய காதலனே நீதூங்க
கண்ணிமைச் சாமரமாய் நான்
(4)

உள்ளத்தில் வாழும் உரியவனே நீபாட
உள்-இசை லப்டப்பாய் நான்
(5)

செல்லுக்குள் நிற்கின்ற தென்னவனே நீயேதும்
சொல்லும்முன் கேட்பேனே நான்
(6)

இப்படித்தான் சொல்வதென ஏதும் தெரியாமல்
எப்படியோ சொல்கின்றேன் நான்
(7)

ஏதேதோ கற்பனையை எண்ணத்தில் வைத்துவிட்(டு)
ஏதோ பிதற்றுகின்றேன் நான்
(😎

இம்சை தருகின்ற என்காதல் நோய்தந்த
கம்சன் மருமகனா நீ?
(9)

கனவிலே பாடும் கவிராசா போலே
நனவிலும் வந்தாயோ நீ
(10)

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_144

No comments: