25/01/2021

அளவுப்பத்து---------------குறள் வெண்பாக்கள்------------அந்தாதி



அளவை அறியாமல் ஆடுகிற ஆட்டம்
களத்திலே நிற்காது காண்
(1)

காண்பதை எல்லாமே கைப்பற்ற எண்ணாமல்
வேண்டுவதை மட்டுமே வேண்டு
(2)

வேண்டியது கிட்டியும் வேண்டுமென நிற்போர்க்கு
வேண்டியதும் போகும் விலக்கு
(3)

விலக்குவதை எல்லாம் விரும்புவோர் என்றும்
விளங்கவே மாட்டார் விடு
(4)

விடுமுறை நாளெல்லாம் வேண்டுமட்டும் ஆடி
விடுவதாய்ச் சொல்வது வீண்
(5)

வீண்வாதம் செய்வோர்கள் வேண்டுவது யாதென்றால்
தான்சொல்லும் சொல்லே சரி
(6)

சரியென்றும் தப்பென்றும் தர்க்கத்தில் செல்வோர்
சரியென்றால் ஏற்பரா சொல்
(7)

சொல்வதை என்றும் சுருக்கமாய்ச் சொல்வோர்க்குச்
சொல்லென்றும் வெல்கின்ற சொல்
(😎

சொல்லும்சொல் மீறாமல் சொன்னதுபோல் செய்வோரே
எல்லோரும் வேண்டும் உறவு
(9)

உறவினரே ஆனாலும் உண்மையைச் சொல்லும்
அறிவுரைக்கும் உண்டோர் அளவு
(10)

✍️செ.இராசமாணிக்கம்

#வள்ளுவர்_திங்கள்_146


No comments: