29/01/2017

சாதியம் பேசும் வீணர்களே!



சாதியம் பேசும் வீணர்களே! நீர்
சாக்கடைக் குழியில் வீழ்ந்தவரே!

சாதனையென்றே சொல்லி சொல்லி! நீர்
போதனை பலவாய் செய்கின்றீர்

உயர்வு தாழ்வு எண்ணங்களால்! நீர்
உலகைப் பிரித்தே பார்க்கின்றீர்

மனிதனை மனிதன் ஆண்டிடவா? இந்த
மதமும் சாதியும் தோன்றியது!

மனிதம் தளைத்து ஓங்கிடவே! நல்
மனத்தில் வெறிகளை நீக்கிடுவீர்

சாதிய சங்கம் தேவையெனில்! நம்
தமிழை சாதியாய் மாற்றிடுவோம்

வேதம் வகுத்த சாத்திரங்கள்! அது
வேதனை தந்தால் நீக்கிடுவோம்

பிளவைப் புதிதாய் போடாமல்! நல்ல
பிணைப்பைத் தமிழால் ஆக்கிடுவோம்

வாழ்க தமிழ்!

✍️ செ. இராசமாணிக்கம்

No comments: