18/01/2017

குடங்குடமா குடிச்சபின்னே

குடங்குடமா குடிச்சபின்னே
குடிமறக்க மாலைபோட்டு
குடிக்காமத்தான் இருந்தீக

மலையிரங்கி வந்ததுமே உங்க
மதிகோணல் ஆயிடுச்சு எங்க
மனசு உடைஞ்சி போயிடுச்சி


குலத்தொழிலை தொலைச்சீக
குடும்பத்தையும் மறந்தீக
குணங்கெட்டு திரிஞ்சீக

குலங்கெட்டு போனபின்னும்
குடிக்கிறது குத்தமான்னு
கூசாமக் கேப்பீக

யாருபோட்ட சாபமோன்னு
ஊருக்குள்ள ஒரேப்பேச்சு
உமக்கேனோ தெரியாமப் போச்சு

கருவுல வந்த மகன்
தெருவில கெடக்கிறான்னு
ஊரில சொல்லும்போது

உருக்குலஞ்சு போயிட்டாக
உயிரப் பாதி விட்டுட்டாக
உன்னைப் பெத்துப் போட்டவுக

பில்லி சூனியம் இருக்குமோன்னு
பூசாரி வாக்கு கேக்க
போயிக்கிட்டே இருக்குறாக

காட்சியேதும் மாறவில்லை
காலமின்னும் கூடவில்லை
காத்துமட்டும் கிடக்கிறாக

மீண்டும் மீண்டு வருவீகன்னு

No comments: