19/01/2017

அறவழியில போராடி



அறவழியில போராடி
அகிலத்தையே அதிரவைச்ச
அண்டத்தையே மிரளவைச்ச
அனைவருக்கும் புரியவைச்ச
அடுக்கடுக்காக அளந்துவிட்ட
அரசியல் அடிமைகள
அடிக்காம அடிச்சுப்புட்ட
அடிவயிர கலங்கவச்ச

ஊரெல்லாம் ஒன்னுகூடி பெருந்
தேரெல்லாம் இலுத்தவன
பாரல்லாம் கேக்க வைச்ச
யாருடா இவங்கன்னு

தமிழனோட அடையாளம்
தலைவணங்காத் தன்மானம்
தனியாத்தான் தெரியுதிங்கே
தரணியல்லாம் அதிருதிங்கே

முறிக்கிவிட்ட மீசையோட
முரட்டுக்காளை வேகத்தோட
மிரட்டும் அனல் பார்வையோட
மளமளவெனக் கூட்டத்தோட
தகதகவெனக் கோபத்தோட
அலைகடலென வந்துநீயும்
அடிமனச குளிரவைச்ச
அறவழியில போராடி




மறத்தமிழன் மாண்பறியார்
மடத்தனமாய் பேசுகின்றார்

மாட்டிற்கு வதை ஏன் என்றே
மதிகெட்டே வினவுகிறார்

எம் குழந்தை போலதனை
எம் நெஞ்சில் வைத்ததனை

கொஞ்சி கொஞ்சி பாத்துக்கிட்ட
கொழு கொழுவென வளர்த்துவிட்ட

எங்களோட பிள்ளைகள
ஏறுதழுவி விளையாட

எவங்கிட்ட கேக்கனம்னு
ஏதிலார் நினைக்கின்றார்

தமிழனென்ற ஒரு சொல்லைத்
தரணியிலே போற்றிடவே

முடியாதென நீ மறுத்தாய் இனி
முழுநேரம் நீ தவிப்பாய்

No comments: