28/01/2017

ராஜா கவி ராஜா


தா கவி என்று என்னிடம் நீ
புது கவி ஒன்று கேட்டாயே
பல கவி பாடியவர் உலகினிலே
என் கவி பொடியென நானறிவேன்
ராஜ கவி யாய் வாழ்ந்து வந்த
மகா கவி பாரதி இன்றிருந்தால்
என் கவி(தா)த் திறமை வளர்த்திடவே
தனி கவி ஒன்றை கேட்டிடுவேன்
பொதுக் கவி இயற்றிய வேந்தனிடம்
சுயக் கவி நானும் கேட்டதற்கு
தமிழ் கவி உலகின் கால்களிலே
ராஜா கவி(தாவாய்) நான் வீழ்ந்திடுவேன்

✍️ செ. இராசமாணிக்கம் கவிதா

No comments: