09/02/2024

ஆதிப் பரம்பரைன்னு அழுத்திச் சொல்லுடா

 #தொகையறா_1

நெல்லையெனச் சொன்னாலும்..ஏலே
மதுரையெனச் சொன்னாலும்...ஏய்
கோவையெனச் சொன்னாலும். ஏனுங்க
சென்னையெனச் சொன்னாலும்...என்னாங்குற
எல்லோரும் ஒன்னு-இங்கே
எல்லோரும் ஒன்னு
தமிழோட மண்ணு - இது
தமிழோட மண்ணு

#பல்லவி
ஆதிப் பரம்பரைன்னு அழுத்திச் சொல்லுடா
சாதிப் பெருமைகளை ஒதுக்கித் தள்ளுடா
நீதி கிடைக்கினுன்னா நிமிர்ந்து நில்லுடா
மோதி ஜெயிக்கனுன்னா வேணும் தில்லுடா

#துள்ளலிசை
தமிழனோட நாகரிகம் தரணி அறிய வேணும்
தமிழனுக்குள் பிரிவினைன்னா சேதி எப்படித் தெரியும்?
தலைமுறைகள் தாண்டிநம்மப் பெருமை சேர வேணும்
தருதலைகள் தலையெடுத்தால் உண்மை எப்படிப் புரியும்?

தீர்வாகவே
.....தீயாகவே
........நேராகவே
..............நீயோடிவா!

சீராகவே
‌....பாராளவே
........பாங்காகவே
...........பாய்ந்தோடிவா!

ஆதிப் பரம்பரைன்னு....

✍️செ. இராசா


No comments: