16/02/2024

பொழைக்க ஒரு வழியுமில்லை

 


தொகையறா 

கேனப்பய ஊருக்குள்ள
கிறுக்குப்பய நாட்டாம..
ஊருபூராம் கொள்ளையடிச்சு
வாழுறானே மாட்டாம..
..வாழுறானே மாட்டாம..
 

பல்லவி
பொழைக்க ஒரு வழியுமில்லை
போக ஒரு இடமுமில்லை
விடியலின்னும் வரவில்லையே
அண்ணாச்சி
ஏறும் விலை குறையவில்லை
ஏழ்மை நிலை மறையவில்லை
மாறுமுன்னு சொன்னாங்களே என்னாச்சி

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!
 

சரணம்-1
பகுத்தறிவு வேணுமுன்னு பாடம் நடத்துறான்..
பார்ட்னரைத்தான் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான்...
தாலியென்ன தாலியென்று கேலி செய்யுறான்..
தாலிகட்டித் தாரத்திடம் பல்லைக் காட்டுறான்..

சாதியற்ற சமத்துவந்தான் வேணு
மென்கிறான்..
சாதியென்ன பார்த்துதானே சீட்டை ஒதுக்குறான்...
டாஸ்மாக்க மூடனும்னு கோசம் போடுறான்...
நாங்கயெப்ப சொன்னமுன்னு வாயை மூடுறான்....

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!
 

சரணம்-
அனைவருமே சரிசமன்னு அழகாப் பேசுறான்..
அடுத்தடுத்த வாரிசுக்கே வாய்ப்பக் கொடுக்குறான்..
ஓட்டயெண்ணி மதவுணர்வைத் தூண்டப் பார்க்குறான்..
ஓனருபோல் நினைச்சிநம்மைக் கூறு போடுறான்..

ஒரேநாட்டு மக்களுன்னு ஓங்கிப் பேசுறான்..
உழைக்குமெங்கப் பாட்டாளிய ஒடுக்கப் பாரக்குறான்
கூட்டணிக்குக் கொள்கைகளை அடகு வைக்கிறான்...
குனிஞ்சுபோயி கால்பிடிச்சே நிமிர நினைக்கிறான்.‌

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!

✍️செ. இராசா

No comments: