15/02/2024

பகுத்தறிவு வேணுமுன்னு

பகுத்தறிவு வேணுமுன்னு பாடம் நடத்துறான்..
பார்ட்னரைத்தான் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான்...

தாலியென்ன தாலியென்று கேலி செய்யுறான்..
தாலிகட்டித் தாரத்திடம் பல்லைக் காட்டுறான்..

சாதியற்ற சமத்துவந்தான் வேணு
மென்கிறான்..
சாதியென்ன பார்த்துதானே சீட்டை ஒதுக்குறான்...

டாஸ்மாக்க மூடனும்னு கோசம் போடுறான்...
நாங்கயெப்ப சொன்னமுன்னு வாயை மூடுறான்....

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!

✍️செ. இராசா

No comments: