09/10/2023

கவிதை

மரபுக்கவிதை
மரபு வரம்புக்குள் வார்த்திட்ட எல்லாம்
பரம்பரை தாண்டிநிற்கும் பார்
 

புதுக்கவிதை
மரபை உடைத்தும் வனப்புடன் செய்தால்
நிரந்தரமாய் நிற்கும் நிலைத்து
 

நவீனக்கவிதை
படிமம் வடிவமென்று பாங்கினை மாற்றி
பொடிவைத்துப் பேசும் பொறி
 

சந்தக்கவிதை
ஓசை நயம்மிக ஓடுகின்ற சந்தமெனில்
ஆசைக் குறைவுள்ளோர் யார்?
 

ஹைக்கூக்_கவிதை
வாமனன் போலிருந்து வைக்கின்ற ஈற்றடிக்குள்
யார்மனமும் வீழும் எளிது!
 

வசனகவிதை
சொல்லாடல் கொண்டு சுகமாகச் சொன்னால்தான்
எல்லோர்க்கும் போகும் எளிது!

✍️செ. இராசா

No comments: