24/10/2023

கருப்பா எனச் சொன்னதுமே

 


கருப்பா எனச் சொன்னதுமே
காளையப்போல் வருவாயே- வந்து
காலச்சுத்திக் கிடப்பாயே...

குளிப்பா என சொன்னாலோ
புளிப்பா அதை நினைப்பாயே- அட
போப்பா எனப் போவாயே...

வெளியாளு வந்தாக்க
வேகமா குரைப்பாயே; அதே
வீட்டாளு வந்தாலோ
மெதுவா உரைப்பாயே..

தாய்க்குத் தலைமகன்போல்
தாயோடே இருந்தாயே..
தந்தைக்குக் கடைமகன்போல்
எந்தையோடிருந்தாயே...

கூழோ கஞ்சியோ
கூலாகக் குடிப்பாயே....
எலும்போ கறியோ
எல்லாமும் உண்பாயே...

தவமென்ன செய்தோமோ
துணையாக இருந்தாயே...
தவறென்ன செய்தோமோ
தவிக்கவிட்டுப் போனாயே...

உன்...ஆன்மா சாந்தியடையட்டும் கருப்பா
என்றும் உன் நினைவோடு...

✍️செ. இராசா

பிறப்பு: 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள்
இறப்பு: 24.10.2023

No comments: