10/10/2023

நாடுவிட்டு நாடுவந்து

 நாடுவிட்டு நாடுவந்து
.....நாளையெண்ணி வாழ்பவர்
நாடிநிற்கும் போது:அந்த
......நாளிலென்ன வாழுவார்!

ஓடிவந்த ஊரிலெங்கும்
......ஓடிவேலை செய்பவர்
ஊரிலுள்ள வேலையென்றால்
.....ஊமையாகி ஓடுவார்!

வாடிநின்ற காலமன்று
.....வாழ்வையெண்ணி நோபவர்
வாய்ப்புவந்த பின்னுமிங்கு
.....வெந்துநொந்து பேசுவார்!

தேடிவந்த தேவையொன்றைத்
......தேடிவிட்ட போதிலும்
தேடுமந்த தேடலொன்றைத்
‌......தீர்ந்திடாமல் தேடுவார்!

✍️செ. இராசா

No comments: