22/04/2017

குரு வணக்கம்



அருள்பசியால் இரை(ற)தேடி
அலைந்தேதான் திரிந்தேனே!
அருள்மழையே பொழிந்தாலும்
அடியேன்நான் நனையலையே!

வந்தவழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்னேனே!
போனயிடம் அத்தனையும்
பாவிப்பசி தீரலையே!

முக்திவழி காட்டிடவே
முத்து ஐயா வந்தாரே!
அருட்தந்தை கருத்துக்களை
அமுதம்போல தந்தாரே!

எம்குருவின் ஆசியாலே
என்பிணிகள் ஓடியதே!
அகத்தவத்தின் அற்புதத்தால்
அருள்பசியும் அடங்கியதே!

ஆதியையாம் அடைந்திடவே
ஆனதவம் சொன்னாரே!
விழிப்புநிலை சாவியாலே
விதிப்பூட்டைத் திறந்தாரே!

துயர்துடைத்த எம்குருவை
துரியத்திலே வாழ்த்துகிறேன்!
மனமாலே மொழியாலே
மகிழ்ந்ததேநான் வணங்குகிறேன்!

வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் ஐயா

No comments: