18/04/2017

வள்ளுவம் போற்றுவோம்







அறத்தை உயிராய்க் காத்து
பொருளை உடலுக்காய் சேர்த்து
இன்பத்தை மனதினில் கொள்வோம்

கடவுளைப் பாயிரம் பாடி
இல்லறம் நல்லறம் செய்து
துறவறம் பொதுநலம் பயில்வோம்

மூன்று பால்களும் பயின்றால்
நான்காம் பாலாம் வீட்டை
ஐங்கரன் அருளால் பெறலாம்

ஊழ்வினை ஆற்றும் செயலால்
உயர்வும் தாழ்வும் வரலாம்
உண்மை தவறிட வேண்டாம்

நட்பியல் அறிந்தோர் வாழ்வில்
நாளும் இன்பம் அடைவார்
நட்பால் உயர்வைப் பெறுவார்

கர்மம் செய்திடும் முன்னே
காலம் கணித்திட வேண்டும்
கடமை ஆற்றிட வேண்டும்

அரசர் அமைச்சர் எல்லாம்
அறத்தை அரணாய் காக்க
அளித்த குறள்கள் பயில்வீர்

கல்லாமை இருளை அகற்றி
கல்வியை அறிவாய் மாற்றி
அன்பை அருளாய் ஆக்குவோம்

ஊடல் கூடல் காமம்
ஊறுகள் களைத்திடும் பாடம்
உயர்மறை திருக்குறள் ஒதும்

குறளால் தமிழுக்குப் பெருமை
தமிழால் தமிழர்க்குப் பெருமை
தமிழரால் தரணிக்கேப் பெருமை

வாழ்க தமிழ்!
வாழ்க குறள்!
வாழ்க வள்ளுவன்!

No comments: