18/04/2017

மகளே செல்ல மலரே




மகளே செல்ல மலரே!
மாரில் தவழும் மயிலே!
மழலை கொஞ்சம் மொழியால்
மனதில் மின்னும் நிலவே!

வித்தில் விளைந்த முத்தே!
விருப்பில் பிறந்த சொத்தே!
விவேகம் கலந்த குறும்பால்
விடியல் கொள்ளுது மனமே!

கவிதா கருவழி உறவே!
கடவுள் அருள்வழி வரவே!
கதைக்கும் அழகைக் கண்டால்
களிப்பில் கவிதை வருதே!

தங்கை இல்லா நிலையே!
தந்தது எம்முள் குறையே!
தங்கை மகளாய் வந்ததால்
தந்தையும் தமையனும் ஒன்றே!

அப்பா என்ற சொல்லே!
அனுதினம் அமுதைத் தருதே!
அணுவின் ஒலியைக் கேட்டால்
அகிலமே மறந்து விடுமே!

No comments: