28/03/2017

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா



வாழ்க்கைப் பயணத்திலே
தன்னலத்தை மறந்தவனே-நீ
வாழ்க்கை அனைத்தையுமே
அர்ப்பணிப்பில் கரைத்தவனே!

வாடியவர் முகம்பார்த்தால்
வதங்குமடா உம்மனமே-அவர்
வாசல்வரை ஓடிவந்து
உதவுமடா உம்கரமே!

சிவாவென்ற நாமத்தினை
சுற்றத்தினர் அழைத்தவுடன்
சிலநொடியில் மின்னலென
சீவனாக நிற்பவனே!

சிந்தையிலே தெய்வமில்லா
நாத்திகத்தை கொண்டாலும்- நீ
சிறப்பான குணத்தாலே
ஆத்திகனை வென்றவனே!

இடைவேளை இல்லாமல்
எக்கணமும் உழைப்பவனே-நீ
இளைப்பாறும் வேலையிலும்
பிறர்நலனை நினைப்பவனே!

இடிபோன்ற துயரங்களை
புன்னகையால் வெல்பவனே! நீ
இறுமாப்பு கொள்ளாத
இதயத்தால் சிரிப்பவனே!

கடுகளவும் சேர்க்காதும்
மலையளவு அளிப்பதாலே- நீ
கர்மயோகி வள்ளலாகி
கர்ணனையும் வென்றவனே!

வாழ்க நண்பா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா

No comments: