28/03/2017

ஒவ்வொரு கணங்களிலும் இன்பம்/ சுகமான நினைவுகள்


பிஞ்சுக் குழந்தையின் மெய்களிலே
கொஞ்சிப் பழகிடும் கணங்களிலே
நெஞ்சில் துளிர்த்திடும் இன்பங்களை
விஞ்சும் தருணங்கள் வேறுண்டோ?!

வெற்றிப் படிகளை மிதிக்கையிலே
தூற்றிய பலரது வாய்களிலே
போற்றிடும் வார்த்தைகள் வருங்கணமே
காற்றினில் வலிகள் பறக்காதோ?!

இசையை இரவில் கேட்கையிலே
இளமை பழமை நினைவினிலே
இதயம் கடந்து போகையிலே
இனிமை இதுவெனத் தோன்றாதோ?!

நண்பனை மீண்டும் பார்க்கையிலே
நட்பில் கலந்து லயிக்கையிலே
நதிநீர் வெள்ளம் போல்மனதும்
நளினம் ஆடியே ஓடாதோ?!

காதலி கரங்களில் விழுகையிலே
காதல் கடலில் குளிக்கையிலே
காலையும் மாலையும் தெரியாமல்
காட்சிகள் கண்களில் மறையாதோ?!


No comments: